IND Vs SA T20: இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி

aus ind t20 - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டி20 போட்டி, கௌஹாத்தி, 02.10.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 237 ரன், ராகுல் 57, ரோஹித் 43, சூர்யகுமார் யாதவ் 61, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 49, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17, கேசவ் மஹராஜ் 2/23) தென் ஆப்பிரிக்க அணியை (20 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 221 ரன், டி காக் ஆட்டமிழக்காமல் 69, டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106, அர்ஷதீப் சிங் 2/62) 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், 5 ஃபோர், 5 சிக்ஸுடன் 62 ரன் எடுத்தார்.

ஏழு பந்துகள் விளையாடிய தினேஷ் கார்த்திக் 2 சிக்ஸ், ஒரு ஃபோருடன் 17 ரன் எடுத்தார். இந்திய அணியின் ரன் ரேட் 11.85ஆக இருந்தது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

அடுத்து விளையாடிய தெனாப்பிரிக்க அணியின் தலைவர் பௌமாவும் ரோஸ்கோவும் முதல் இரண்டு ஓவர்களில் ஆட்டமிழந்தனர். மர்க்ரம் ஏழாவது ஓவரில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 47ஆக இருந்தது. அதன் டேவிட் மில்லரும் டி காக்கும் இணைந்து அருமையாக ஆடினர்.

இருப்பினும் அஷ்வின், தீபக் சாஹார் இருவரும் அதிக ரன் கொடுக்காமல் பந்து வீசினர். மற்றவர்கள் வீசிய பந்துகள் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தன. கடைசி ஓவரில் 37 ரன் எடுக்க வேண்டிய ஒரு நிலை.

பந்து வீச வந்தவர் அக்சர் படேல்; எனவே ‘நோ பால்’, ‘வைட்’ வீச வாய்ப்பு குறைவு. எனவே ஆறுபந்துகளிலும் சிக்சர் அடித்தாலும் வெற்றி பெறலாம் என்ற கணக்கோடு 20ஆவது ஓவரை இந்திய அணி வீசியது.

அந்த ஓவரில் மூன்று சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஆனாலும் இதர மூன்று பந்துகளில் இரண்டு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே இந்திய அணி வென்றது.

சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 50 ரன் அடித்து சாதனை செய்துள்ளார். 12 பந்துகளில் யுவராஜ் சிங் 50 ரன் அடித்து இருப்பது இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை. மேலும் சூர்யகுமார் 31 டி20 போட்டிகளில் 1000 ரன் இன்று எடுத்துள்ளார். இந்த வெற்றியோடு இந்திய அணி 2-0 என்றா கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியை வெல்லும் முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெறுகிறார். கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

Entertainment News

Popular Categories