February 15, 2025, 3:12 PM
31.6 C
Chennai

ஆசிரியையின் காதல்- பிளஸ்-2 மாணவன் தற்கொலை

டியூசன் சொல்லிக்கொடுத்த இளம் ஆசிரியையின் காதல் லீலையால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஷர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார்.

இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஷர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி ஷர்மிளா டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இந்த படங்களை இருவருமே வாட்ஸ்அப்பில் பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர். இப்படி பிளஸ்-2 ஆசிரியை-மாணவனின் காதல் நீண்டு கொண்டே சென்றுள்ளது. டியூசன் முடிந்து வீடு திரும்பிய பிறகும் ஆசிரியை ஷர்மிளா, செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து உள்ளார்.

இதன் பிறகு ஆசிரியை, மாணவன் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. ஆசிரியைக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதனால் மாணவனுடன் பேசுவதை ஆசிரியை தவிர்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் மாணவனோ ஆசிரியையுடன் தொடர்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியை ஷர்மிளாவை நேரில் சந்தித்து மாணவன் பேசி உள்ளார். என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது நியாயமா? என்று கேட்டு ஷர்மிளாவுடன் மாணவன் சண்டை போட்டு உள்ளார். ஆனால் மாணவனுடனான தொடர்பை துண்டிப்பதில் ஆசிரியை உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவன் பயன்படுத்திய செல்போனை அவனது நண்பர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஷர்மிளா டீச்சரும், மாணவனும் ஒன்றாக இருக்கும் படங்கள் அதில் இருந்தன. நீண்ட நேரமாக இருவரும் செல்போனில் பேசி இருப்பதும் பதிவாகி இருந்தது.

இது பற்றி மாணவனின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அம்பத்தூர் மகளிர் போலீஸ் ஷர்மிளாவை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது செல்போனையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்துள்ளனர். அதில் ஷர்மிளா டீச்சர் மாணவனை காதலில் வீழ்த்தியது உறுதியானது.

பிளஸ்-2 மாணவன் மைனர் என்பதாலும், தவறான கண்ணோட்டத்தோடு பழகிய குற்றத்துக்காகவும் ஷர்மிளா டீச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியை ஷர்மிளா, மாணவனுடன் எந்த மாதிரியான தொடர்பில் இருந்தார்? என்பது பற்றி கண்டு பிடிப்பதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் வந்த பின்னரே, ஷர்மிளா டீச்சர் மாணவனோடு உடல் ரீதியான உறவு வைத்திருந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இளம் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவனை காதல் வலையில் வீழ்த்தியதும், இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் மாணவன் படித்த பள்ளியை சேர்ந்த மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!

அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து

திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஐசிஎஃப்-பில் முதல் ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Entertainment News

Popular Categories