இந்து கடைகளிலேயே பொருள்களை வாங்குங்கள் என நோட்டீஸ் விநியோகித்தவர் கைது; இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramanian - 2026
kadeswara subramanian

தமிழக காவல்துறை அரசியல்வாதிகளின் அடிமைகளாக ஆர்டர்லியாக செயல்படுகிறது- என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய இந்து வியாபாரிகள் கடன் வாங்கி , முதல் போட்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்..
ஏற்கனவே கொரோனா போன்ற தொற்று காரணமாக இந்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடங்கியிருந்த சூழலில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையையே பெரிதும் நம்பி உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரத்தின் மூலம் மட்டுமே இந்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது..


இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த இந்து வியாபாரிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம் என்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இந்து முன்னணி பேரியக்கத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி அவர்களை காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது…


உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்திய திருநாட்டில் கருத்துரிமைக்கும் பேச்சுரிமைக்கும் அடிப்படை உரிமை இந்திய அரசியல் சாசன சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது…


ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இந்து விரோத போக்கை தொடர்ந்து செய்து வருகிறது. இந்துக்களுக்காக குரல் கொடுத்தால் கடுமையான சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்வதும் சிறையில் அடைப்பதும் திமுகவின் தமிழக அரசிற்கு அன்றாட வேலையாகிப் போனது..


இந்துக்களுக்கு எதிராகவும் இந்து கடவுளுக்கு எதிராகவும் ஆபாசமாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் திமுகவினரும் சிறுபான்மையினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத கையாலாகாத காவல்துறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல செயல்படுகிறது..
புலனாய்விலும் குற்றங்களை தடுப்பதிலும் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்று திராவிட மாடல் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாறியிருப்பது வேதனை தரக்கூடியதாக உள்ளது.


அதிலும் இந்து முன்னணி நிகழ்ச்சிகளை தடுப்பதற்கும் நிர்வாகிகளை கைது செய்வதற்கும் மட்டுமே தமிழக காவல்துறையினருக்கு சிறப்பு படி ஏதும் தருகிறார்களோ என்னவோ?


நீதிமன்றமே கண்டித்த பிறகு ஆர்டர்லி முறையை ஒழித்ததாக தமிழக காவல்துறை தலைவர் தெரிவிக்கிறார் ஆனால் காவல்துறை அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுகவினருக்கு அரசியல் ஆர்டர்லியாக செயல்படுகிறது என்பது எல்லாரும் அறிந்த உண்மை…


மேலும் இந்து விரோத போக்கினாலும் இந்து நம்பிக்கையை சிதைப்பதினாலும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடிப்பதாலும் இந்து முன்னணி வேலையை கடுகளவும் தடுத்திட முடியாது என்பதை காவல்துறை உணர வேண்டும்…


இனியும் இந்து விரோத போக்கு தொடர்ந்தால் மக்கள் திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிவார்கள்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories