விருதுநகர் அருகே தோட்டத்தில் குளிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி..

Tamil News large 3150579 - 2026

விருதுநகர் அருகே சதானந்தபுத்தில் உள்ள பம்பு செட்டு கிணறு தோட்டத்தில் இன்று குளிக்க சென்ற தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் லோடுவேன் ஓட்டுனராக பணியாற்றி கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சாந்தி, இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில்,
இவருடன் அதே பகுதியை சேர்த்த லோடுமேனாக
முனியசாமி என்பவரும் வேலை (50) செய்து வருகின்றனர்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.

முனியசாமி, சீனிவாசனும், ஆகிய இருவரும் சதானந்தபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பம்பு செட்டு கிணற்று தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது காட்டுப்பன்றிகளை தடுக்க போட்டுள்ள மின்வெளியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதியினர் சீனிவாசன் குடும்பத்தினருக்கும், முனியசாமி குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரது உடலையும் பார்த்து கதறி அழுது, வச்சக்காரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மோகன்ராஜ் சட்ட விரோதமாக தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாகவும், அதனால் அதில் சிக்கி சீனிவாசனும் முனியசாமியும் உயிரிழந்ததாகவும் அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories