spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை-

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை-

- Advertisement -

இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 7மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 7 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விடுதலை செய்ததோடு, விசைப்படகு உரிமையாளர் மைக்கேல்ராஜ் உரிய ஆவணங்களுடன் ஜனவரி மாதம் 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe