ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை திமுக அரசு கைவிட்டதுதான் சாதனை -இபிஎஸ்..

IMG 20221116 WA0065 - 2026
IMG 20221116 WA0066 - 2026

ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை அனைத்தையும் திமுக அரசு கைவிட்டு விட்டதுதான் திமுகவின் சாதனை என்று சிதம்பரம் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக், திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு கைவிட்டு வருகின்றன என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அன்று நிவாரணப் பொருள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில் வடகிழக்கு பருவமழை ஆரம்ப கட்டத்திலேயே கனமழை பெய்து கடலூர் மாவட்டத்திலே பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்தோம். எதிர்கட்சியாக இருக்கும் போதும் மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரே இயக்கம் அதிமுகதான். ஏனென்றால் இந்த இயக்கம் தோற்றுவித்ததே ஏழைகளுக்காகதான். எம்ஜிஆர் ஏழை மக்கள் நலம் காக்கவும், துண்பம், வேதனைகளை போக்குவதற்காக அதிமுகவை தோற்றுவித்தார்கள்.

அடுத்த வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செயல்படுத்தினார். நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடன் கலைந்து உதவிகளை செய்தார். அவர்களுடைய வழியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆகவே டெல்டா மாவட்டத்தை பொறுத்த வரை, கடலூர் மாவட்டம் எப்போதெல்லாம் பருவ மழை காலங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்பகுதியில் கனமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படு வருகிறார்கள். வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்கு எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, நான் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து வடிகால் வசதிகளை செய்து மழை நீர், வெள்ளநீர் வடிகின்ற சூழலை உருவாக்கி தந்துள்ளோம்.

கடலூர் மாவட்டத்தில் ம.ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.500 கோடியில் கதவணை கட்டி கொடுத்துள்ளோம். கதவணை மூலமாக மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை தந்துள்ளோம். எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் வேதனைகளை மீட்டெடுக்கும் வகையில் உதவிகளை செய்துள்ளோம்.

கடந்த காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடன்களை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். அதன் பிறகு கரோனா தொற்று காலத்தில் விவசாயிகள் வருமானம் குறைந்து அல்லல்பட்டிருந்த போது விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் இரு முறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்த அரசு ஜெயலலிதா அரசு.

ஏழை எளிய மக்கள், விவசாய தொழிலாளிகள் பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி வளர்க்கும் திட்டங்களை கொண்டு வந்தோம். அம்மா மினி கிளினிக் என்ற அற்புதமான திட்டத்தை கிராமப்புறங்களில் கொண்டு வந்தோம். 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அத்தனையும் திமுக அரசு மூடிவிட்டு நகர்ப்புற மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு மூடிக்கொண்டிருந்கின்றன.

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் கொண்டு வந்தோம். இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டில் 565 பேருக்கு தேர்வு செய்யப்பட்ட, செலவில்லாமல் மருத்துவம் பயின்று வருகின்றனர். பொங்கல் தொகுப்பு நாங்கள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் மிக மோசமான பொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வகையில் மடிக்கணினி கொடுத்தோம். இந்த அரசை அதையும் நிறுத்திவிட்டது. இன்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறார்கள். திருமண உதவி திட்டம், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்றார் இபிஎஸ்.

முன்னதாக சிதம்பரம் எல்லையில் எடப்பாடி கே.பழனிசாமியை, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories