கரூரில் ஐயப்ப தர்ம பிரசார சபா கொடியேற்று நிகழ்ச்சி

karur aiyappa sang flag hoisting - 2026

கார்த்திகை முதல் தேதியையொட்டி கரூரில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் சங்க கொடியேற்று விழா நிகழ்ச்சி

தமிழகத்தில் கரூரை மையமாக கொண்டு இயங்கும் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவில் கார்த்திகை முதல் தேதி நேற்று துவங்கியதை முன்னிட்டு அமைப்பின் நிறுவனரும், முதன்மை போஷகர் பி.என்.கே மேனன் ஆசீர்வாதத்துடனும், தேசிய தலைவர் ஐயப்பதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் சங்க கொடி ஏற்று விழா நிகழ்ச்சி கரூர் மாவட்ட அளவில் ஆங்காங்கே சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக காந்திகிராமத்தில் உள்ள கரூர் மாவட்ட அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் அலுவலகத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விஷேச பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல, கரூர் மாவட்டத்தில் தெற்கு காந்திகிராமம், அசோக் நகர், அருகம்பாளையம், வெண்ணைமலை மற்றும் தம்மநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தேசியப் பொருளாளர் எல்.ஆர்.ராஜூ, மாநிலத் துணைத் தலைவர் பி.சங்கரநாராயணன், மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ், மாவட்ட செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், மாவட்ட பொருளாளர் எம்.மகேந்திரன், மாவட்ட மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என்று அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

வருகின்ற மண்டல மகர காலங்களில் அமைப்பின் சார்பில் நடைபெறுகின்ற அன்னதானமானது கேரளாவில் நடைபாதையில் உள்ள எரிமேலி, தமிழகத்தில் தென்காசியில் உள்ள செங்கோட்டை மற்றும் பழனி ஆகிய மூன்று இடங்களில் நடைபெற உள்ளதாகவும், அதனை சிறப்பாக நடத்தி ஐயப்ப பக்தர்களை சிறப்பிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories