சாலை மண்ணை அகற்றியதால் மரம் விழுந்து பாதிக்கப் பட்டவர்; சிகிச்சைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

hindumunnani - 2026

திருநெல்வேலி மாவட்டம் விகே புரம் பகுதியில் நேற்று (02/12/2022) மாலை முருகன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 4 மணி அளவில் மரம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலை வேலை நடைபெறுவதற்காக அந்த சாலையில் இருந்த மண்ணை அகற்றியதால் (சாலையின் இருபுறமும்) அந்த மரம் சாய்ந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதில் அவர் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவாறு பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு MRI ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதன் பின்னர் தான் அதற்கான சிகிச்சை கொடுக்க முடியும் என்று சூழ்நிலை இருக்கும் போதும் வரும் செவ்வாய்க்கிழமை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அரசிடம் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து நடந்துள்ள சூழ்நிலையில் மேலும் மருத்துவ நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இப்போது சிகிச்சையிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் ஓர் உயிர் காப்பாற்றப்படும். தமிழக முதல்வரும், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணயம் அவர்களும் கவனத்தில் கொண்டு ஆவன செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு கேட்டுக்கொள்கிறேன்.

  • வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணியின் மாநிலத் துணை தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories