சென்னை: கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பில், கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒருவரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணை நடத்தாமலும் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் ஒப்புதலைப் பெறாமலும் கட்சியின் உறுப்பினரை நீக்கமுடியாது. இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… என்று ப.சிதம்பரம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காங்கிரஸார் 6 பேர் நீக்கம்: ப.சிதம்பரம் கண்டனம்
Popular Categories


