தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய திமுக., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்

TN-assembly சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தேமுதிகவினர் மீதான நடவடிக்கை குறித்து பேச அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பணியாற்ற முடியாது என்று பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்றால் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை இருக்கும். அதனால் நீண்ட நாட்கள் அவர்களால் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து திங்கள்கிழமை வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடர் வரையுடன் சஸ்பெண்ட் நடவடிக்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு, ‘திங்கள்கிழமை வரைதானே’ என்று நான் கேட்டேன். அதற்கு பேரவைத் தலைவர், ஆமாம் என்று தலையாட்டினார். அதற்காக பேரவைத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தேன். பத்திரிகைகளில்கூட அப்படித்தான் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இப்போது ‘ஆளுநர் இந்தக் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் வரை தேமுதிக உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கையில் கலந்துகொள்ளக் கூடாது’ என்கிறார் பேரவை தலைவர். பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் முடிந்த பிறகுதான் இந்தக் கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைப்பார். அதுவரை தேமுதிகவினர் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கக் கூடாது என்கிறார். இப்போது, பேரவைத் தலைவர் யாருடைய பரிந்துரைக்கும் செவி சாய்க்கவில்லை என்கிறார். காரணம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கவே வாய்ப்பு தரப்பட்டுள்ளது என கட்டம் கட்டி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை கிடைத்துவிடுமோ என கருதி, பட்ஜெட் கூட்டத் தொடர் வரை தேமுதிகவினர் உள்ளே வரமுடியாது என்று கூறினர். அவர்களிடம் பெருந்தன்மை இருக்கும் எனக் கருதி மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்தோம்” என்றார். இது போல், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் இந்த நடவடிக்கை சரியானதல்ல. இதை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். [su_posts posts_per_page=”10″ tax_term=”212″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories