தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மறுபரிசீலனை செய்ய திமுக., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்

TN-assembly சென்னை: தேமுதிக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தேமுதிகவினர் மீதான நடவடிக்கை குறித்து பேச அனுமதி அளிக்காததால் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பணியாற்ற முடியாது என்று பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்றால் பட்ஜெட் கூட்டத்தொடர் வரை இருக்கும். அதனால் நீண்ட நாட்கள் அவர்களால் பணியாற்ற முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து திங்கள்கிழமை வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடர் வரையுடன் சஸ்பெண்ட் நடவடிக்கையை முடித்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு, ‘திங்கள்கிழமை வரைதானே’ என்று நான் கேட்டேன். அதற்கு பேரவைத் தலைவர், ஆமாம் என்று தலையாட்டினார். அதற்காக பேரவைத் தலைவருக்கு நன்றியும் தெரிவித்தேன். பத்திரிகைகளில்கூட அப்படித்தான் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இப்போது ‘ஆளுநர் இந்தக் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் வரை தேமுதிக உறுப்பினர்கள் பேரவை நடவடிக்கையில் கலந்துகொள்ளக் கூடாது’ என்கிறார் பேரவை தலைவர். பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் முடிந்த பிறகுதான் இந்தக் கூட்டத்தொடரை ஆளுநர் முடித்து வைப்பார். அதுவரை தேமுதிகவினர் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கக் கூடாது என்கிறார். இப்போது, பேரவைத் தலைவர் யாருடைய பரிந்துரைக்கும் செவி சாய்க்கவில்லை என்கிறார். காரணம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்கவே வாய்ப்பு தரப்பட்டுள்ளது என கட்டம் கட்டி பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை கிடைத்துவிடுமோ என கருதி, பட்ஜெட் கூட்டத் தொடர் வரை தேமுதிகவினர் உள்ளே வரமுடியாது என்று கூறினர். அவர்களிடம் பெருந்தன்மை இருக்கும் எனக் கருதி மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்காததால் வெளிநடப்பு செய்தோம்” என்றார். இது போல், காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் இந்த நடவடிக்கை சரியானதல்ல. இதை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். [su_posts posts_per_page=”10″ tax_term=”212″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories