முதல் முறையாக மின் இணைப்பு கிடைத்ததை நடனமாடிக் கொண்டாடிய காஷ்மீர் கிராம மக்கள்!

kashmir village gets electricity first time - 2026

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தொலைதூரப் பகுதியில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த கிராம மக்கள் முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் “ஹர் கர் பிஜிலி யோஜ்னா” திட்டத்தின் கீழ், அனந்த்நாக் மாவட்டத்தின் தெதன், தூருவில் உள்ள பழங்குடியினர் பகுதி மக்கள் முதன்முறையாக மின் பல்புகளை ஒளிரச் செய்தனர்.

மின்வாரிய வளர்ச்சித் துறை ஊழியர்கள் முதல் விளக்கை ஏற்றிய போது கிராமம் முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கியது. கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளைச் சுற்றி உள்ளூர்வாசிகள் நடனமாடத் தொடங்கினர். அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“நாங்கள் முதன்முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம், இது எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நிம்மதியாக படிக்க முடியும்.

மின்சாரம் இல்லாமல் வாழ்வது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எரியும் விளக்கின் கீழ் படிப்பார்கள். முன்மாதிரியான பணிக்காக மின்சாரத் துறை ஊழியர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று அனந்த்நாக்- டூர், டெத்தாவில் வசிக்கும் ஃபசல் தின் கூறினார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம வீடுகளிலும் ஒளியூட்டுவதை இலக்காகக் கொண்ட பிரதான் மந்திரி மேம்பாட்டுத் திட்டமான “ஹர் கர் பிஜிலி யோஜனா” திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது 2019 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

தேத்தன் கிராமத்தில் சுமார் 38 HT கம்பங்கள் மற்றும் 57 LT கம்பங்கள் கொண்ட இரண்டு முக்கிய மின்மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளன.

“இது மிகவும் மலைப்பாங்கான கிராமம், நாங்கள் இந்த கிராம மக்களுக்கு முதல் முறையாக மின்சாரம் வழங்க முடிந்தது. இந்த கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட, அரசாங்கத்தின் கடுமையான உழைப்பும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளும் காரணமாகும்.

இந்தப் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், இந்த இடங்களில் கம்பங்கள், மின் சாதனங்களை நிறுவுவதற்கு நாங்களே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று மின்சாரத் துறையில் இருக்கும் ஃபயாஸ் அகமது கூறினார்.

தொலைவில் உள்ள இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னும் இருளில் வாழும் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க மின் மேம்பாட்டுத் துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories