February 22, 2026, 7:08 AM
25.4 C
Chennai

முதல் முறையாக மின் இணைப்பு கிடைத்ததை நடனமாடிக் கொண்டாடிய காஷ்மீர் கிராம மக்கள்!

kashmir village gets electricity first time - 2026

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தொலைதூரப் பகுதியில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த கிராம மக்கள் முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் “ஹர் கர் பிஜிலி யோஜ்னா” திட்டத்தின் கீழ், அனந்த்நாக் மாவட்டத்தின் தெதன், தூருவில் உள்ள பழங்குடியினர் பகுதி மக்கள் முதன்முறையாக மின் பல்புகளை ஒளிரச் செய்தனர்.

மின்வாரிய வளர்ச்சித் துறை ஊழியர்கள் முதல் விளக்கை ஏற்றிய போது கிராமம் முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கியது. கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளைச் சுற்றி உள்ளூர்வாசிகள் நடனமாடத் தொடங்கினர். அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“நாங்கள் முதன்முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம், இது எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம், குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நிம்மதியாக படிக்க முடியும்.

மின்சாரம் இல்லாமல் வாழ்வது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எரியும் விளக்கின் கீழ் படிப்பார்கள். முன்மாதிரியான பணிக்காக மின்சாரத் துறை ஊழியர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று அனந்த்நாக்- டூர், டெத்தாவில் வசிக்கும் ஃபசல் தின் கூறினார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம வீடுகளிலும் ஒளியூட்டுவதை இலக்காகக் கொண்ட பிரதான் மந்திரி மேம்பாட்டுத் திட்டமான “ஹர் கர் பிஜிலி யோஜனா” திட்டத்தின் கீழ் இந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இது 2019 இல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.

தேத்தன் கிராமத்தில் சுமார் 38 HT கம்பங்கள் மற்றும் 57 LT கம்பங்கள் கொண்ட இரண்டு முக்கிய மின்மாற்றிகள் வைக்கப்பட்டுள்ளன.

“இது மிகவும் மலைப்பாங்கான கிராமம், நாங்கள் இந்த கிராம மக்களுக்கு முதல் முறையாக மின்சாரம் வழங்க முடிந்தது. இந்த கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட, அரசாங்கத்தின் கடுமையான உழைப்பும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளும் காரணமாகும்.

இந்தப் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால், இந்த இடங்களில் கம்பங்கள், மின் சாதனங்களை நிறுவுவதற்கு நாங்களே பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று மின்சாரத் துறையில் இருக்கும் ஃபயாஸ் அகமது கூறினார்.

தொலைவில் உள்ள இந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னும் இருளில் வாழும் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க மின் மேம்பாட்டுத் துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories