IND Vs SL ODI: கோலி அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!


ind vs sl odi - 2026

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் ஆட்டம், கௌஹாத்தி, 10.01.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


இந்திய அணி (373/7, விராட் கோலி 113, ரோஹித் ஷர்மா 83, சுப்மன் கில் 70, ராகுல் 39, ஷ்ரேயாஸ் ஐயர் 28, ரஜிதா 3/88) இலங்கை அணியை (306/8, தசுன் ஷனகா 108*, நிசாங்கா 72, தனஞ்சயா 47, உம்ரான் 3/57, சிராஜ் 2/30) 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ALSO READ:  மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் சேர்த்திருந்த போது, சுப்மன் கில் (70) விக்கெட்டை இழந்தார். மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி இலங்கை அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு மளமளவென ரன்னும் குவித்தார். ஸ்ரேயஸ் ஐயர் (28), கே.எல் ராகுல் (39) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (14) ஆகியோர் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மிக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். விராட் கோலிக்கு இது 73வது சதமாகும். அதே போல் கிட்டத்தட்ட 1100 நாட்களுக்கு பிறகு விராட் கோலி இந்திய மண்ணில் அடிக்கும் சதமும் இது தான்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

போட்டியின் 49வது ஓவர் வரை இலங்கை வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்த விராட் கோலி, 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 373 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ரஜிதா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மதுஷான்கா, ஷனாகா, கருணாரத்னே மற்றும் டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இலங்கை அணி ஆடவந்தபோது முகமது சிராஜ் பந்துவீச்சில் இரண்டு விக்கட்டுகள் விரைவாக வீழ்ந்தன. ஃபெர்னாண்டோ (5 ரன்), குசால் மெண்டிஸ் (ரன் எடுக்கவில்லை) ஆகியோர் ஆட்டமிழந்தபின்னர் நிசாங்கா அசல்ங்காவுடனும் (23 ரன்) தனஞ்சயாவுடனும் (47 ரன்) இணைந்து அணியின் ஸ்கோரை சரிவிலிருந்து மீட்டார். அதன் பின்னர் 25ஆவது ஓவரில் விளையாட வந்த இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா (ஆட்டமிழக்காமல் 108 ரன்) இந்திய வெற்றியை தாமதப்படுத்தினார்.

வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்குரியதாகவே இருக்கிறது. கௌஹாத்தி மைதானம் பீட்டர்களுக்குச் சாதகமானது; இரண்டாம்பாதியில் பனிப்பொழிவு இலங்கை அணிக்குச் சாதகமாக இருந்தது என்று காரணங்கள் சொன்னாலும் பந்துவீச்சு இன்னும் நன்றாக இருக்கவேண்டும்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories