சிக்கிமில் திடீர் நிலநடுக்கம் 4.3 ரிக்டர் பதிவு..

Published:

images 91 1 - 2026

குஜராத் லடாக் அசாமில் தொடர்ந்து இந்தியாவில் இன்று சிக்கிமில் அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியது. துருக்கியிலும் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.இந்தியாவில் அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதிக்கு அருகில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவாகியுள்ளது.உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img