கேரளா-சேவையை துவக்கிய இரிஞ்சிடப்பள்ளி ராமன்..

Published:

Robo Elephant 16768725873x2 1 - 2026

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோவில் விழாக்கள் மற்றும் சாமி ஊர்வலத்தில் இந்த யானைகள் பங்கேற்பது வழக்கம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, கோவிலின் அன்றாட பூஜைகளிலும் யானைகள் கலந்து கொள்ளும்.

இவ்வாறு கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் சில நேரங்களில் மதம் பிடித்து பாகன்களை தாக்குவது, பக்தர்களை விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இது போன்ற சம்பவங்களை தடுக்கவும், யானைகளை பாதுகாக்கவும் விலங்குகள் நல வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது. இதன் நிர்வாகி ஒருவர் அசல் யானைகளுக்கு பதில் ரோபோ யானைகளை பயன்படுத்தினால் என்ன? என்று யோசித்தார்.

l54720230220142025 - 2026

எந்திர யானை திருச்சூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இன்று முதல் இந்த யானை கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் இந்த யானை தும்பிக்கையை நீட்டி பக்தர்களுக்கு ஆசியும் வழங்குகிறது. இனி கோவிலில் நடைபெறும் ஊர்வலத்தில் சாமி சிலைகளையும் இந்த எந்திர யானையே சுமந்து செல்லும். இது பற்றி விலங்குகள் நல வாரியத்தினர் கூறும்போது, எந்திர யானைகள் பயன்படுத்துவதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி இடையூறு இருக்காது என்றனர்

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கேரளா திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை இனி சேவைசெய்யவுள்ளது என்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ரோபோ யானையினை பெட்டா(PETA ) அமைப்பானது கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளது.

பார்க்க நிஜ யானை போலவே காட்சியளிக்கும் இது பொத்தானை அழுத்தினால் தனது துதிக்கை வாயிலாக நீரை உமிழ்கிறது என்று கூறப்படுகிறது.10அடி உயரமும் 800கிலோ எடையும் கொண்டுள்ள இந்த யானை மேல் 4 பேர் அமரலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த யானையை கோயில் சாமி ஊர்வலத்திற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த ரோபோ யானைக்கு ‘இரிஞ்சிடப்பள்ளி ராமன்’ என்று கோயிலின் தலைமை நம்பூதிரி ராஜ்குமார் பெயர் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img