21-03-2023 11:36 AM
More
    Homeசற்றுமுன்நாட்டைப் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை-ராகுல்

    To Read in other Indian Languages…

    நாட்டைப் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை-ராகுல்

    IMG 20230316 WA0104 - Dhinasari Tamil

    நாட்டைப் பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை என்று புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதில் ஆட்சேபத்துக்குரியது எதுவும் இல்லை. ஆனால், அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியது முழுவதும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

    லண்டனில் பேசியது குறித்து நான் முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதற்காக மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

    நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று நான் மக்களவைத் தலைவரிடம் கோரினேன். என் மீது நான்கு அமைச்சர்கள் புகார் கூறியிருக்கிறார்கள். எனவே, அதற்கு பதிலளிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் எனது விளக்கத்தை முதலில் நாடாளுமன்றத்தில்தான் அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் ஊடகங்கள் முன் விளக்க வேண்டியது அவசியம். வெள்ளிக்கிழமையாவது என்ன மக்களவையில் பேச அனுமதிப்பார்களா என்று நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    மேலும், அதானி குழுமம் பற்றி, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய பல கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...