January 21, 2025, 4:13 AM
23.2 C
Chennai

விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை-இபிஎஸ்..

சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அ.தி.மு.க. கொணடு வந்த திட்டங்களை கைவிட்டு விட்டன. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. தமிழக அரசு தார்பாய்களை வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.

வேளாண் மானியக்கோரிக்கையில் உள்ளன வற்றை பட்ஜெட்டாக வாசித்து உள்ளனர். விவசாயிகள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு நன்மையும் இடம் பெறவில்லை. பெரிய திட்டங்கள் எதையும் விவசாயிகளுக்காக இந்த அரசு அறிவிக்கவில்லை.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. கரும்பு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இன்று வேளாண் பட்ஜெட்டை 3-ம் முறையாக தாக்கல் செய்தும் அது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. எனவே இந்த வேளாண் பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கினோம். ஆனால் இந்த அரசு ரூ.13,500 மட்டுமே வழங்கி உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய்கள் வழங்கி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து கொண்டு இருக்கின்றன. காவிரி குண்டாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது கண்ட னத்துக்குரியது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் நடக்க முடியாத சவலை குழந்தையாக உள்ளதாக அவர் கூறினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...