தமிழகத்தில் 13 நகரங்களில் சதத்துக்கும் மேல் வெயில்..

Published:

500x300 1864772 summer 1 - 2026
#image_title

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தில் 13நகரங்களில் நூறு டிகிரி க்கும் மேல் வெயில் வாட்டி எடுத்தது.

சென்னை101.60 டிகிரி, கோவை 101.3 டிகிரி, தருமபுரி 102.2 டிகிரி, ஈரோடு 105.8 டிகிரி, பரமத்திவேலூா் 105.44 டிகிரி, மதுரை நகரம் 103.64 டிகிரி, மதுரை விமானநிலையம் 102.2 டிகிரி, நாமக்கல் 103.1டிகிரி, சேலம் 105.08 டிகிரி, தஞ்சாவூா் 100.4 டிகிரி,திருச்சி 103.46, திருப்பத்தூா் 103.64 டிகிரி,திருத்தணி 103.1டிகிரி வேலூா் 103.64 டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவானது.

செவ்வாய், புதன்கிழமை இரு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.20, 21) இரு நாள்கள் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி குறைந்த பட்ச வெப்ப நிலை 80 டிகிரி என்ற அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img