December 8, 2025, 5:38 AM
22.9 C
Chennai

ராஜபாளையம்- வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதம்..

IMG 20230420 WA0097 - 2025
#image_title

ராஜபாளையம் நகராட்சியில் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அலட்சியமாக பதில் அளித்த அதிகாரியால் மக்கள் கொந்தளிப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் நகராட்சியில் அதிகமாக உள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் வரி குறைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த மார்ச் 28-ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு உயர்த்தப்பட்ட குடிநீர் வழி திரும்ப பெறப்பட்டது. மேலும் மார்ச் 26-ம் தேதி
எம் எல் ஏ .மற்றும் வட்டாட்சியர் நகராட்சி தலைவர் ஆகியேருடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில், ஏப்ரல் 20-ம் தேதிக்குள் சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் 31- ம் தேதி ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணை வெளியிட்டு 20 நாட்கள் ஆன பின்னும் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சொத்து வரி செலுத்த சென்றவர்களிடம் பழைய வரி விகிதப்படி அதிகாரிகள் வசூல் செய்தனர்.

இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோர் வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்துங்கள் அல்லது அதுவரை வரி வசூலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வருவாய் ஆய்வாளர் முத்துகுமார், வரி வசூல் செய்ய வேண்டாம் என்றால் நகராட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விடவா என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த வரி உயர்வு எதிர்ப்பு போராட்ட குழுவினர், அறிவுரைப்பு அரசாணை செயல்படுத்தாத ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories