ராஜபாளையம்- வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதம்..

IMG 20230420 WA0097 - 2026
#image_title

ராஜபாளையம் நகராட்சியில் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அலட்சியமாக பதில் அளித்த அதிகாரியால் மக்கள் கொந்தளிப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் நகராட்சியில் அதிகமாக உள்ள சொத்து வரி மற்றும் குடிநீர் வரி குறைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த மார்ச் 28-ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு உயர்த்தப்பட்ட குடிநீர் வழி திரும்ப பெறப்பட்டது. மேலும் மார்ச் 26-ம் தேதி
எம் எல் ஏ .மற்றும் வட்டாட்சியர் நகராட்சி தலைவர் ஆகியேருடன் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில், ஏப்ரல் 20-ம் தேதிக்குள் சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் 31- ம் தேதி ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணை வெளியிட்டு 20 நாட்கள் ஆன பின்னும் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சொத்து வரி செலுத்த சென்றவர்களிடம் பழைய வரி விகிதப்படி அதிகாரிகள் வசூல் செய்தனர்.

இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோர் வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்துங்கள் அல்லது அதுவரை வரி வசூலை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வருவாய் ஆய்வாளர் முத்துகுமார், வரி வசூல் செய்ய வேண்டாம் என்றால் நகராட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விடவா என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த வரி உயர்வு எதிர்ப்பு போராட்ட குழுவினர், அறிவுரைப்பு அரசாணை செயல்படுத்தாத ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories