December 7, 2025, 3:31 AM
24.5 C
Chennai

தங்கப் பல்லக்கில் இன்று கள்ளழகர் மதுரை புறப்பாடு..

images 24 - 2025
#image_title

மதுரை தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பாடு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளு கிறார்.

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழாவாகும். இந்த திருவிழா நேற்று மாலை தொடங்கியது. கள்ளழகருக்கு மங்கள இசை முழங்க, வேத மந்தி ரங்களுடன் காப்பு கட்டுதல் நடந்தது. அதன் பின்னர் பல்லக்கில் கள்ள ழகர் புறப்பாடாகி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்தார்.

கோவிலின் கல்யாண சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, வர்ணக் குடை, சகல பரிவாரங்களுடன் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது விசேஷ பூஜைகள், நூபுர கங்கை தீர்த்தத்தினால் சர விளக்கு, தீபாராதனை நடந்தது. கள்ளழகர் மனோரஞ்சிதப்பூ மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அதே பரிவாரத்துடன் சுவாமி புறப்பாடாகி கோவிலுக்குள் இருப்பிடம் சேர்ந்தார். இன்று மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இன்று (3-ந் தேதி) மாலையில் கள்ளழகர் மதுரைக்கு தங்கப் பல்லக்கில் புறப்படு கிறார். வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளு கிறார்.

4-ந் தேதி மதுரை மூன்று மாவடியில் எதிர் சேவை நடக்கிறது. 5-ந் தேதி (வெள்ளிக் கிழமை) அதிகாலையில் 5.45 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். அன்று மதியம் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்வு நடைபெறுகிறது. அன்று இரவு மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி கள் நடக்கிறது. 7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. 8-ந் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோவி லுக்கு புறப்பாடாகிறார்.

அன்றிரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறும். 9-ந் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறு கிறது. மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 39 தள்ளுவண்டி உண்டியல்கள் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்புகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அழகர்கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories