கர்நாடகா தேர்தல் பிரதமர் இன்று பிரமாண்ட ரோடு ஷோ-ஓட்டுவேட்டை

500x300 1876912 modi - 2026
#image_title

கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு கேட்டார். மக்கள் வழிநெடுக திரண்டு வரவேற்பு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி 3-வது கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

பா.ஜக. சார்பாக பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்கனவே சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். அந்த கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி 3-வது கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார். பெல்லாரி, துமகூரு புறநகர் தொகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதை தொடர்ந்து பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களை கவரும் விதமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை பிரதமர் மோடி ஊர்வலத்தை தொடங்கினார். பெங்களூரு தெற்கு பகுதியில் ஆர்.பி.ஐ. மைதானத்தில் சோமேஸ்வரா பவனில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரதமர் மோடி உற்சாகமாக பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

ஆ.பி.மைதானம் முதல் மல்லேசுவரத்தில் உள்ள சாங்கி டாங்கி வரை 26½ கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் திரளாக கூடி நின்று பிரமர் மோடியை பார்த்து கையசைத்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த சாலைகளில் உள்ள கடைகளை காலையில் திறக்கவும் போலீசார் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி வரும் பாதையில் தூவுவதற்காக சாலை ஓரமாக மலர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories