கர்நாடகா தேர்தல் பிரதமர் இன்று பிரமாண்ட ரோடு ஷோ-ஓட்டுவேட்டை

500x300 1876912 modi - 2026
#image_title

கர்நாடகா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு கேட்டார். மக்கள் வழிநெடுக திரண்டு வரவேற்பு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி 3-வது கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன.

பா.ஜக. சார்பாக பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்கனவே சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். அந்த கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி 3-வது கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார். பெல்லாரி, துமகூரு புறநகர் தொகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இதை தொடர்ந்து பெங்களூருவில் 17 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களை கவரும் விதமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் ஒட்டு மொத்தமாக 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை பிரதமர் மோடி ஊர்வலத்தை தொடங்கினார். பெங்களூரு தெற்கு பகுதியில் ஆர்.பி.ஐ. மைதானத்தில் சோமேஸ்வரா பவனில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரதமர் மோடி உற்சாகமாக பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார்.

ஆ.பி.மைதானம் முதல் மல்லேசுவரத்தில் உள்ள சாங்கி டாங்கி வரை 26½ கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் திரளாக கூடி நின்று பிரமர் மோடியை பார்த்து கையசைத்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு நிறைவடைகிறது. பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த சாலைகளில் உள்ள கடைகளை காலையில் திறக்கவும் போலீசார் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி வரும் பாதையில் தூவுவதற்காக சாலை ஓரமாக மலர்கள் குவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories