தமிழ்நாடு10ஆம் வகுப்பு தேர்வு முடிவு..

Published:

500x300 1883693 students - 2026
#image_title

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படித்து தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.

தேர்வெழுதிய 16,284 மாணவ, மாணவியரில் 14,702 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 7166 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 7535 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.28 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுவையில் 9.2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

இதேபோல, மாா்ச் 14 முதல் ஏப்.5 வரை நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தோ்வை 7.73 லட்சம் போ் எழுதினா். தொடா்ந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றப்பட்டன.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தோ்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  8341 மாணவர்கள் 7943 மாணவிகள் என மொத்தம் 16284 மாணாக்கர்கள்  தேர்வினை எழுதியுள்ளனர் இதில் 7167 மாணவர்களும்   7535 மாணவிகளும் என  மொத்தம் 14702 தேர்ச்சி பெற்றுள்ளனர் 

மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 85.92%, மாணவிகள் தேர்ச்சி சதவீதம்  94.86%. ஆகமொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 90.28% ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதங்களைக் காணலாம்.
10ஆம் வகுப்பு முடிவுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அதற்கு அடுத்தபடியாக விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய தேர்வில் 91.39 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி. மாணவிகள் 94.66 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

தமிழ்நாட்டில், 3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகள் 87.45% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.24%, தனியார் பள்ளிகளில் 97.38% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img