December 6, 2025, 7:25 AM
23.8 C
Chennai

75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது-மோடி..

IMG 20230528 WA0097 - 2025
#பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றும் மோடி

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம் என புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரையாற்றினார் புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது திறமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது. சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது என பேசினார்.

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

அதன்பின்னர் பாராளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மேலும் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்த நேரத்தில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.

இது வெறும் கட்டிடம் மட்டுமல்ல 140 கோடி மக்களின் கனவுகளை நனவாக்கும் இடம். மே 28ஆம் தேதி வரலாற்றில் எப்போதும் பொறிக்கப்பட்டிருக்கும். வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது. புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது திறமை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு இந்தியனும் கவுவரமாக உணர்கின்றனர். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பழமை மற்றும் புதுமைகளை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும். இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டிற்கு வழங்கப்படும் பரிசு.

இது நமது ஜனநாயகத்தின் கோயில், வார்த்தைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் பாராளுமன்றம். இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம். இது இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமல்ல உலகின் வளர்ச்சியையும் பறைசாற்றுகிறது. இன்றைய தினம் புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த செங்கோல் நீதி, நேர்மை, தேசப்பற்று ஆகியவற்றை பிரதிபலிக்கும். செங்கோலை மிகுந்த மதிப்போடு வணங்குகிறேன். செங்கோலின் கௌரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம். சோழர் மரபிலிருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. செங்கோலை வழங்கிய ஆதீனங்களின் முன்பு நான் தலை வணங்குகிறேன்.

இந்தியா ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் தான் நமது சின்னம். நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்கவேண்டும். முயற்சியை தொடரும்போது முன்னேற்றமும் தொடரும். 75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories