பொது சிவில் சட்டம் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு!

FB IMG 1686805031883 - 2026
#image_title

பொது சிவில் சட்டம் குறித்து மத்திய சட்ட வாரியம் பொது மக்களின் கருத்துக் கேட்பு நடத்துகிறது. இது, அண்ணல் அம்பேத்கர் எதிர்பார்ப்பு என்று இந்து முன்னணி வரவேற்றுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், பொது சிவில் சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நமது நாட்டில் அரசியல் சாசன சட்டத்தை வரையரை படுத்தி தொகுத்த அறிஞர் பெருமக்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வரவே விரும்பினார்கள். ஆனால் மதக்கோட்பாடுகளை அது கட்டுப்படுத்தும் என கருதிய நேரு போன்ற முதுகெலும்பு இல்லாத சிலரின் வற்புறுத்தலின் காரணமாக மதத்திற்கு ஒரு சட்டமாக தற்காலிக ஏற்பாடாக அது அமைந்தது.

இந்த விசித்திரமான போக்கு உலகில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. சட்டத்தில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகளே சட்ட விதியாக இது நாள் வரை இருந்தது நமது நாட்டில் தான்.

குற்றவியல் (கிரிமினல்) சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அதில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்படி இருந்தால் ஆப்கானிஸ்தான் போல கொடூர தண்டனைகள் நடைமுறையில் இருந்தால், அதனை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?

ஆனால் இந்திய சிவில் சட்டத்தில் ஏராளமான குளறுபடிகள். திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்து என பலவகையான வழக்குகள் முரண்பாடானதாக தொடர்கிறது.

உதாரணமாக ஆதரவற்ற ஒரு குழந்தையை இந்து மதத்தினர் வளர்த்தாலே அவரது சொத்தில் பங்கு உண்டு. அதே சமயம் கிறித்துவ, முஸ்லிம்கள் சட்டப்படி தத்து எடுத்தாலும் அந்த குழந்தைக்கு சட்டப்படியான உரிமையும் காப்பாளர் அல்லது வளர்ப்பு தந்தை சொத்தில் பங்கும் கிடையாது. அது அனாதையாகவே இருக்கும்.

முஸ்லிமாக இருந்தால் 4 மனைவி வரை திருமணம் செய்வதும் எத்தகைய முரண்பாடு. இதனால் மக்கள் தொகை விகிதாசாரம் அதிகரிக்கும்.இதுபோல் பல சட்டங்களை கூற முடியும்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை அமல்படுத்தும் போது இந்த மத வேறுபாடு தற்காலிமானது. விரைவாக இந்தியர்கள் அனைவருக்குமான சிவில் சட்டம் இயற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தொடர்ந்து பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் பற்றி பொது மக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories