பொது சிவில் சட்டம் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு!

FB IMG 1686805031883 - 2026
#image_title

பொது சிவில் சட்டம் குறித்து மத்திய சட்ட வாரியம் பொது மக்களின் கருத்துக் கேட்பு நடத்துகிறது. இது, அண்ணல் அம்பேத்கர் எதிர்பார்ப்பு என்று இந்து முன்னணி வரவேற்றுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், பொது சிவில் சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நமது நாட்டில் அரசியல் சாசன சட்டத்தை வரையரை படுத்தி தொகுத்த அறிஞர் பெருமக்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வரவே விரும்பினார்கள். ஆனால் மதக்கோட்பாடுகளை அது கட்டுப்படுத்தும் என கருதிய நேரு போன்ற முதுகெலும்பு இல்லாத சிலரின் வற்புறுத்தலின் காரணமாக மதத்திற்கு ஒரு சட்டமாக தற்காலிக ஏற்பாடாக அது அமைந்தது.

இந்த விசித்திரமான போக்கு உலகில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. சட்டத்தில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகளே சட்ட விதியாக இது நாள் வரை இருந்தது நமது நாட்டில் தான்.

குற்றவியல் (கிரிமினல்) சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அதில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்படி இருந்தால் ஆப்கானிஸ்தான் போல கொடூர தண்டனைகள் நடைமுறையில் இருந்தால், அதனை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?

ஆனால் இந்திய சிவில் சட்டத்தில் ஏராளமான குளறுபடிகள். திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்து என பலவகையான வழக்குகள் முரண்பாடானதாக தொடர்கிறது.

உதாரணமாக ஆதரவற்ற ஒரு குழந்தையை இந்து மதத்தினர் வளர்த்தாலே அவரது சொத்தில் பங்கு உண்டு. அதே சமயம் கிறித்துவ, முஸ்லிம்கள் சட்டப்படி தத்து எடுத்தாலும் அந்த குழந்தைக்கு சட்டப்படியான உரிமையும் காப்பாளர் அல்லது வளர்ப்பு தந்தை சொத்தில் பங்கும் கிடையாது. அது அனாதையாகவே இருக்கும்.

முஸ்லிமாக இருந்தால் 4 மனைவி வரை திருமணம் செய்வதும் எத்தகைய முரண்பாடு. இதனால் மக்கள் தொகை விகிதாசாரம் அதிகரிக்கும்.இதுபோல் பல சட்டங்களை கூற முடியும்.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை அமல்படுத்தும் போது இந்த மத வேறுபாடு தற்காலிமானது. விரைவாக இந்தியர்கள் அனைவருக்குமான சிவில் சட்டம் இயற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் தொடர்ந்து பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் பற்றி பொது மக்களின் கருத்தை கேட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories