ஸ்டாலினுக்கு பத்து கேள்விகள்… பதிலென்ன சொல்லுவாரோ?!

Published:

1719347 mk stalin - 2026

‘மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பது சரியா?’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்விகள்:

‘ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவோம்’ என்று சொன்னீர்களே என்னாச்சு?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது ஏன்?

80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று மேடைக்கு மேடை பொய் சொன்னீர்களே… உண்மையை சொல்லுங்கள்; வாக்குறுதிகளை எப்போது தான் நிறைவேற்றுவீர்கள்?

மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பனை செய்வது சரியா?

தமிழகத்தின் கனிமவளம், டன் கணக்கில் கடத்தப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்காதது ஏன்?

பள்ளி, கல்லுாரிகளில், 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

ஆட்சி அமைத்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மின் வெட்டை சரி செய்யாதது நியாயமா?

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

தி.மு.க., ஹிந்துக்களின் விரோதி இல்லை என்று சொல்லிவிட்டு, கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதும் வழக்கமாய் கொண்டிருப்பது சரியா?

தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களாலும், அரசு மருத்துவமனைகளாலும், தமிழக மக்களின் உயிர் பறிபோவது உங்களுக்கு தெரியவில்லையா?

மத்திய அரசின் திட்டங்களுக்கு உங்கள் பெயரை, ‘ஸ்டிக்கராக’ ஒட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்?

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img