சென்னை: ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் கலந்து கொள்ள 42 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடந்த கூட்டத்தில், ‘12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிடில் வருகிற மார்ச் 3-ந்தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம், வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீசும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பு, மார்ச் 2-ந்தேதி (அதாவது இன்று) 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழுவினர், நிர்வாக தரப்பினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...
மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
உரத்த சிந்தனை
தகுந்த வைத்தியம் தேவை!
ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...
மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!
துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்.
கல்வி
1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!
சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.
கட்டுரைகள்
சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!
இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

