December 6, 2025, 9:23 PM
25.6 C
Chennai

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய பிரச்னை: பேச்சுவார்த்தை துவங்கியது

சென்னை: ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக சென்னையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது. இதில் கலந்து கொள்ள 42 போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்த பிரச்சினைக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நடந்த கூட்டத்தில், ‘12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிடில் வருகிற மார்ச் 3-ந்தேதி அல்லது அதற்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம், வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீசும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்பு, மார்ச் 2-ந்தேதி (அதாவது இன்று) 12-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போக்குவரத்து கழகங்களில் செயல்படும் 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் குழுவினர், நிர்வாக தரப்பினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories