புது தில்லி: சி.பி.எஸ்.இ. + 2, 10-ம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை நேற்று தொடங்கின. இந்தத் தேர்வுகளை தமிழகத்திலிருந்து 46 ஆயிரம் பேர் எழுதினர். பிளஸ் 2 தேர்வில் முதல் தேர்வாக ஆங்கில மொழிப்பாடமும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வும் நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. தமிழகத்திலிருந்து பிளஸ் 2 தேர்வை 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுதினர்.

