காலை உணவுத்திட்ட உணவு அருந்தாவிடில் அனைவரையும் கைது செய்வதாக ஆட்சியர் மிரட்டல்!

karur collector news - 2026
#image_title

எல்லோரும் தூக்கு போட்டு தொங்குங்க என்று பொதுமக்களைப் பார்த்துப் பேசி, கரூர் கலெக்டர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு ரெளடி மாதிரியே நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் துவக்கப்பள்ளியில் அருந்ததியினர் சமூக பெண்மணி சமைத்த உணவை சாப்பிட மறுக்கும் பள்ளி மாணவர்கள் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதை விசாரிக்கச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கடந்த 5 ம் தேதி அன்று விசாரணை செய்த போது பெற்றோர்கள் யாரையும் பேசவே விடாமல் அனைவரது செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டு பெற்றோர்களைப் பார்த்து, “நீங்கள் தினந்தோறும் கூலி வேலைதான் செய்கின்றீர்கள். உங்களை எல்லாம் வேலையை விட்டு தூக்கிவிட்டால் இனி சோத்துக்கு இங்கதானே வந்தாகவேண்டும்” என்றும், “இனி நீங்கள் எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய விடமாட்டேன்” என்றும், “உங்கள் குழந்தைகள் இனி இந்தியாவில் எந்தவொரு பள்ளியிலும் படிக்க முடியாதபடி செய்து விடுவேன், நீங்கள்லாம் தூக்கில் தொங்குங்க” என்றும் தரங்கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தியும் நாகரீகமில்லாமல் மிரட்டல் விடுத்து பேசினார். அவரது செயலே வித்தியாசமாக இருந்தது… என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்களிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்த போது, காலை உணவு சமைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் மதுபோதையில் ஊர் மக்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசியதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றும், தலித் அமைப்பை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பள்ளி நடக்கும் நேரத்தில் பள்ளிக்குள் சென்று குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதனால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். காலை உணவுத்திட்டம் என்ற நல்ல பெயரை இவரை போன்றோர்கள் கெடுத்து விடுவது போல் உள்ளது என்றும் கூறினர்.

மேலும், காலை உணவுத்திட்டத்தில் உணவு அருந்தாவிட்டால் அனைவரையும் கைது செய்து விடுவோம் என்றெல்லாம் மிரட்டுபவர்தான் ஒரு ஆட்சியரா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், தமிழக அளவில் 3 முறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டும், கடந்த 2 1/2 வருடங்களாக கரூர் மாவட்ட ஆட்சியராக அதுவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தமிழக அளவில் கல்குவாரிகள், கிரஷர் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகளில் திகழும் கரூர் மாவட்டமாக வழிகாட்டிய நிலையில், கல்குவாரிகள் ஒரு சிலவற்றுக்கு சில கோடி ரூபாயை அபராதமாக அரசே விதித்தும் கூட இன்றும் இந்த மாவட்ட ஆட்சியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் இங்குள்ளவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories