காலை உணவுத்திட்ட உணவு அருந்தாவிடில் அனைவரையும் கைது செய்வதாக ஆட்சியர் மிரட்டல்!

karur collector news - 2026
#image_title

எல்லோரும் தூக்கு போட்டு தொங்குங்க என்று பொதுமக்களைப் பார்த்துப் பேசி, கரூர் கலெக்டர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு ரெளடி மாதிரியே நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலன்செட்டியூர் துவக்கப்பள்ளியில் அருந்ததியினர் சமூக பெண்மணி சமைத்த உணவை சாப்பிட மறுக்கும் பள்ளி மாணவர்கள் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதை விசாரிக்கச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கடந்த 5 ம் தேதி அன்று விசாரணை செய்த போது பெற்றோர்கள் யாரையும் பேசவே விடாமல் அனைவரது செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டு பெற்றோர்களைப் பார்த்து, “நீங்கள் தினந்தோறும் கூலி வேலைதான் செய்கின்றீர்கள். உங்களை எல்லாம் வேலையை விட்டு தூக்கிவிட்டால் இனி சோத்துக்கு இங்கதானே வந்தாகவேண்டும்” என்றும், “இனி நீங்கள் எந்தவொரு தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய விடமாட்டேன்” என்றும், “உங்கள் குழந்தைகள் இனி இந்தியாவில் எந்தவொரு பள்ளியிலும் படிக்க முடியாதபடி செய்து விடுவேன், நீங்கள்லாம் தூக்கில் தொங்குங்க” என்றும் தரங்கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தியும் நாகரீகமில்லாமல் மிரட்டல் விடுத்து பேசினார். அவரது செயலே வித்தியாசமாக இருந்தது… என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

பொதுமக்களிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்த போது, காலை உணவு சமைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் மதுபோதையில் ஊர் மக்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் தரக்குறைவாகப் பேசியதுதான் பிரச்னைக்குக் காரணம் என்றும், தலித் அமைப்பை சேர்ந்த ராஜகோபால் என்பவர் பள்ளி நடக்கும் நேரத்தில் பள்ளிக்குள் சென்று குழந்தைகளை மிரட்டியுள்ளார். இதனால் பள்ளிக்குச் செல்லவே குழந்தைகள் பயப்படுகின்றனர். காலை உணவுத்திட்டம் என்ற நல்ல பெயரை இவரை போன்றோர்கள் கெடுத்து விடுவது போல் உள்ளது என்றும் கூறினர்.

மேலும், காலை உணவுத்திட்டத்தில் உணவு அருந்தாவிட்டால் அனைவரையும் கைது செய்து விடுவோம் என்றெல்லாம் மிரட்டுபவர்தான் ஒரு ஆட்சியரா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், தமிழக அளவில் 3 முறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டும், கடந்த 2 1/2 வருடங்களாக கரூர் மாவட்ட ஆட்சியராக அதுவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தமிழக அளவில் கல்குவாரிகள், கிரஷர் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகளில் திகழும் கரூர் மாவட்டமாக வழிகாட்டிய நிலையில், கல்குவாரிகள் ஒரு சிலவற்றுக்கு சில கோடி ரூபாயை அபராதமாக அரசே விதித்தும் கூட இன்றும் இந்த மாவட்ட ஆட்சியர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் இங்குள்ளவர்கள்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories