
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை – மைசூரு, சென்னை – கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவதாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு.
இதனிடையே, சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணங்களை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 என நிர்ணயம்; ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.