விழாக்கால சிறப்பு ரயில்கள்! பொதிகை ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப் படுமா?

podhigai express oct first - 2026

விழாக்காலமான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுபோல், அதிக வருவாய் ஈட்டும் பொதிகை ரயில் வழித்தடத்தில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. ரயில்வேயில், 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால், தென் மாவட்ட விரைவு ரயில்களில், தீபாவளிப் பண்டிகைக்காக ஊருக்குச் செல்பவர்கள் முண்டியடித்து, முன்பதிவு செய்தனர். இதனால், அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, செங்கோட்டை, கோவை விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல், 300ஐத் தாண்டியுள்ளது.

எனவே சிறப்புரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, ரயில் பயணிகள் மத்தியில் எழுந்தது. இதை அடுத்து, ஆறு சிறப்பு ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில், நான்கு சிறப்பு ரயில்களும், கோவை வழித்தடத்தில், இரண்டு சிறப்பு ரயில்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும். மேலும், முக்கிய விரைவு ரயில்களில், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று கூறினர்.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், பொதிகை அதிவிரைவு ரயிலுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எந்நேரமும் கூட்டம் மொய்க்கும் பொதிகை ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட வேண்டும் என்று ரயில்வே பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Topics

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories