spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விருதுநகர் அடுத்தடுத்து இருவர் கொலை..

விருதுநகர் அடுத்தடுத்து இருவர் கொலை..

- Advertisement -
IMG 20231010 WA0133

சாத்தூரில் டாஸ்மாக் கடை முன்பு கடை ஊழியர் வெட்டி படுகொலை…..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை முன்பு டாஸ்மாக் ஊழியர் இருக்கண்குடியைச் சேர்ந்த காந்திராஜா என்பவர் வெட்டி படுகொலை. பட்டப்பகலில் நடந்த படுகொலையால் பரபரப்பு…ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்…..

IMG 20231010 WA0141

சாவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் காந்திராஜா (33). இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் காந்திராஜா சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல பணியில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வெட்டிய மர்ம நபர்கள் தப்பியோடினர். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உடனடியாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு துரித விசாரணை நடத்தினர். CCTV காட்சி உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெருவில் கூலி வேலை செய்து வரும் சசிகுமார் என்ற இளைஞர் தனது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு; உடலை கைப்பற்றி தாலுகா போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இவரது இளைய மகன் சசிகுமார்(19) கொத்தனார் மற்றும் சிற்ப வேலை செய்யும் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இளைஞர் சசிகுமாருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும் வெளியூர் நண்பர்களை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சசிகுமார் தனது வீட்டில் தனியாக தூங்கி உள்ளார். வீட்டில் இருந்த மற்றவர்கள் அருகே வெளியே சென்று தூங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சசிகுமாரின் தந்தை கணபதி வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சசிகுமார் கழுத்து அறுக்கப்பட்டும் வயிற்றில் கத்தியால் குத்தப்படும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கொலை செய்தது யார் எதற்காக கொலை நடைபெற்றது அண்ணன் தம்பி பிரச்சனையா இல்லை போதைப் பழக்கத்தால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe