
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி மூன்று இடங்களில் நிலவுகிறது.
(1) அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். ஆயினும் இது வட-வடமேற்கில் நகர இருப்பதால் இதனால் தமிழகப் பகுதிகலில் தாக்கம் இருக்காது. மேற்கு வங்கம், வங்கதேசம், வட கிழக்கு இந்திய மாநிலங்களில் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
(2) தமிழக கடற்கரைக்கு கிழக்கே மற்றொரு காற்றுச் சுழற்சி நிலவுகிறது.
(3) குமரிக் கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுகிறது.
இந்த இரண்டு காற்று சுழற்சிகளால் தமிழகத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாகைப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கும். சென்னையிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இன்று மாலை 1630 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கும், இன்று இரவு கனமழை தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்யும்.
14, 15, மற்றும் 16ஆம் தேதி வரை மழை நீடிக்கும்