வெள்ளிமலை ஆஸ்ரமத்துக்கு சமூக சேவைக்கான தேசிய விருது

Published:

vellimalai swami chaithanyananda - 2026
#image_title

வெள்ளிமலை ஆஸ்ரமம் 1940ம் ஆண்டு சுவாமி அம்பானந்தரால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி மதுரானந்தரும், மூன்றாவதாக சுவாமி சைதன்யானந்தஜி மகராஜும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்கள்.

ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று சமூக சேவை, கல்வி மற்றும் மருத்துவ சேவை என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.

மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி என, பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2004ல் சுனாமி ஏற்பட்டபோது முகாம்கள் அமைத்து பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப் பட்டது. ஓகி புயல் பாதிப்பின் போது மலை வாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகள், கொரோனா நேரத்தில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் தென்னிந்தியாவில் சமய வகுப்புகள் நடத்தி இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளையும் செய்து வருகிறது.

இந்த சமூக சேவைகளைப் பாராட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் மங்களம் சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் தத்தோபந்த் தெங்கடி சேவா சம்மான் 2023′ என்ற விருது வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமத்துக்கு 29ம் தேதி புதுதில்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img