நத்தம் மாரியம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா!

natham murugan temple karthigai deepam - 2026
#image_title

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகையை முன்னிட்டு ,பெண்கள் கோவிலின் உள் வெளி பிரகாரங்களில் விளக்கு தீபங்களை ஏற்றினர் . இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதேபோல், கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி கோவில் தனி சன்னதி கொண்ட பால தண்டாயுதபாணிக்கு பால் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து, நடைபெற்றது.

மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ, தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. அதையடுத்து, சிறப்பு பூஜைகளும் நடந்தது.

பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் அசோக் நகர் பகவதி அம்மன் கோவில் கர்ணம் தெரு மதுர காளியம்மன் கோவில் வெட்டுக்கார தெரு பத்திரகாளி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் அருகே திருமலைக்கேணியில் திருக்கார்த்திகை திருவிழா:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், அலங்காரம். தீபாராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி புறப்பாடாகி வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தார்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மண்டபம் முன்பு அமைந்துள்ள ஸ்தூபியில் கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories