June 16, 2025, 11:19 AM
32 C
Chennai

கோயில் அருகே இடையூறாக கட்சிக் கொடிகள்… அகற்றப்படுமா?

chozhavanthan

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.

இந்த வார்டுகளில், சுமார் முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இட நெருக்கடி காரணமாக சோழவந்தானின் புறநகர் பகுதிகளில் விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும், சோழவந்தானின் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமப்
படுகின்றன.

குறிப்பாக, பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால், நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடிக் கம்பங்களை அமைத்து வைத்திருப்பதால் பொதுமக்களுக்கும் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்
களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அருகில் கொடி கம்பங்கள் இருப்பதால், குடிநீரை உபயோகப்படுத்துவதற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்ற விழா நடைபெற்று அதனைத் தொடர்ந்து, வைகாசி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

Topics

இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிப்பதே பிரச்னைகளுக்கு தீர்வு!

இந்திய மக்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடும் அதுவே!

மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

பஞ்சாங்கம் ஜூன்15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. பம்பை நதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

பஞ்சாங்கம் ஜூன் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

Entertainment News

Popular Categories