மீண்டும் மோடி! 3 நாள் பயணமாக தமிழகத்தில்..!

modiji in madurai temple - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார்.

‘மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற பிரசார உத்தியுடன் பாஜக., தமிழகத்தில் பிரதமர் மோடியை அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாதம் 4ம் தேதி (மார்ச் 4) சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அது முழுக்க அரசியல் கூட்டமாகவே நிகழ்ந்தது. அக்கூட்டத்தில், திமுக.,வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று உறுதிபடக் கூறினார். அதற்கு முன்னதாக கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அது முழுக்க அரசு சார்பிலான நிகழ்ச்சியாகவே ந்டைபெற்றது.

அதன் பின்னர் திருநெல்வேலியில் கட்சி சார்பிலான பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். இதை அடுத்து அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தித் தாளில் கொடுத்த விளம்பரத்தில், சீன கொடியுடன் ராக்கெட்டும் அதன் அருகே பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றதால் அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை அடுத்து அந்த கூட்டத்திலும் கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்டார். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தி மேலும் அரசியல் சூட்டை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் 3வது முறையாக வரும் மார்ச் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் அவர் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்திற்கு மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories