- ஆனந்தன் அமிர்தன்
நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.
எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். சில வருடங்கள் கழித்து நான் மும்பை ஐஐடிக்குப் படிக்கப் போய்விட்டேன். ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகே கிராமத்திற்குத் திரும்பினேன்.
இப்பொழுதெல்லாம் தர்பூசணிகள் சாப்பிடும் போட்டிகள் மிகவும் குறைந்து போயிடுச்சுனு கேள்விப்பட்டேன். மார்கெட்டுகளிலும் தர்பூசணி மிகவும் சிறுத்துப் போயிருந்தன.
வழக்கமா போட்டி நடத்தும் பெரியவரைப் போய் பார்க்கலாம்னு போனா, இப்ப அவர் மகன் விவசாயத்தைப் பார்த்துக் கொள்வதாகவும், பெரியவர் ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார். தர்பூசணிப் போட்டிகளை நன்றியுடன் அவரிடம் நினைவுபடுத்திய பொழுது, சில விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்குப் பெரிய ஆச்சர்யம்!
அதாவது, போட்டிக்கு மிகச் சிறந்த மற்றும் பெரிய பழங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார். இரண்டு நிபந்தனைகள் தான்.
1, விதைகளைக் கடித்து விடக் கூடாது.
2, விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டுமே துப்ப வேண்டும்.
இதன் மூலம்,
1, அடுத்த போகம் விதைப்பதற்கான நல்ல விதைகள் இலவசமாக கிடைத்து விட்டன.
2, கோடைகால கொடுமையிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.
பின்னாளில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகன், பெரிய பழங்களையெல்லாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கி விட்டார். நல்ல வருமானம். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் தர்ப்பூசணி அளவிலும், விளைச்சலிலும் குறைந்தது.
நம் பாரம்பரிய விதைகளையும் முறைகளையும் கைவிட்டதன் பலன் இது.
இதே போல் தான்,உலகமே ஆன்மீகத் தலைமையாக நம் நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் நம் பண்பாட்டையும், முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும் நம் அடுத்த சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டால், நம் சந்ததியினர் தவறான ஆட்களால், தவறான வழிகளில் திசை திருப்பப்படுவார்கள். இது நம் நாடு! நம் பொறுப்பு!
தெய்வத்திரு. மனோகர் பாரிக்கர் , தேசிய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் அவர்களின் அனுபவப் பேச்சு இது.
முடிந்தளவு மொழி பெயர்த்திருக்கிறேன்.