புதுப் பெயர் வைக்க எங்களுக்கும் தெரியும்! திபெத்துக்கு சூட்டி, சீனாவுக்கு இந்தியா பதிலடி!

china websites - 2026

புதிதாக பெயர் வைப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்ற வகையில் திபெத்தில் உள்ள இடங்களுக்கு இந்தியா புதிதாக பெயர் சூட்டியுள்ளது

இந்தியாவின் பகுதியான அருணாசலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு, புதிதாகப் பெயர்களை சூட்டிய சீனாவுக்கு பதிலடி தரும் விதமாக திபெத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகளும் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2020 மே 5ல் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது இந்திய சீன வீரர்களுக்கு இடையே அது மோதலாக வெடித்தது. பாங்காங் ஸோ பகுதியில் சீன நாட்டு வீரர்கள் தடுக்கப்பட்டு, இந்திய வீரர்கள் பெரும் பதிலடி கொடுத்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பின் இந்தியா – சீனா இடையேயான ராஜீய உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக உறவைத் தவிர மற்ற உறவுகள் சுமுகமாக நடைபெறவில்லை.

இந்நிலையில் வேண்டுமென்றே இந்தியாவை உசுப்பேற்றும் விதமாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனது நாடு தொடர்பிலான பெயர்களை வைத்து, அதனை வரைபடத்தில் குறிப்பிட்டு, சீனா அவ்வப்போது சீண்டி வருவது வழக்கமாகிவிட்டது.

அந்த வரிசையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் கடந்த ஏப்ரல் மாதம் பெயர்களை மாற்றியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ‘புதிதாக பெயர்களை சூட்டுவதன் வாயிலாக, அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்ற உண்மை நிலை மாறிவிடாது’ என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு, தற்போது சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவும் சீனாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு வேறு பெயர்களைச் சூட்டி வருகிறது.

திபெத்தில், இந்தியா வசம் உள்ள 30 இடங்களுக்கு இந்திய மொழியில் புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, பிராந்திய உரிமையை உறுதிப்படுத்துவதே நம் அரசின் நோக்கம். புதிய பெயர் சூட்டும் இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைப் பிரதேசங்கள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைவழிப்பாதை மற்றும் ஒரு நிலப்பரப்பு இடம் பெற்றுள்ளன.

திபெத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்தப் புதிய பெயர்ப் பட்டியலுடன் கூடிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் இந்திய ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.

இது குறித்து பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியபோது, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories