‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

modi in bjp hq - 2026
#image_title

மோடி குடும்பம் என்று மோடியின் அன்பர்கள் சமூகத் தளங்களில் போட்டுக் கொண்டது போதும், அவற்றை எடுத்து விடலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை குடும்பம் இல்லாத நபர் என விமர்சித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜக., அமைச்சர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் தங்களின் பெயருக்கு பின்னால் தாங்கள் மோடியின் குடும்பம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ‘மோடி கா பரிவார்’ என, மோடியின் குடும்பத்தினர் என்ற வார்த்தையை சேர்த்து, தங்கள் ப்ரொபைல் பிக்சர் ஆக வைத்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகத் தளப் பதிவில் வெளியிட்ட தகவல்:

என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாடு முழுதும் பலர் சமூக வலைதள கணக்கில், தங்கள் பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் எனப்படும் மோடியின் குடும்பம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தை தந்தது.

தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது சாதனை. இந்த வெற்றியின் வாயிலாக நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவருக்கும் நன்றி.

இனி, மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories