சமூக வலைத்தள வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்!

Published:

employment career opportunities - 2026
#image_title

‘சமூக வலைதளங்களில் வெளியாகும், வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்களை நம்பி, முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என, மின்வாரியம் எச்சரித்து உள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால், சைபர் கிரைம் இணையதளத்தை, https://cybercrime.gov.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கலாம். மேலும், 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம். வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் மோசடி – விழிப்புடன் இருங்கள்…

இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இ-மெயிலுக்கும் மோசடி கும்பல் SMS அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

உங்கள் பார்சலை சரியான முகவரி இல்லாததால், டெலிவிரி செய்ய முடியவில்லை. எனவே, பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க, 48 மணி நேரத்தில் முகவரியை அப்டேட் செய்யுங்கள் என லிங்க் அனுப்பி, அந்தரங்க தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே உஷார்!

இதேபோல் இ-செலான் பெயரிலும் மோசடி நடக்கிறது. கவனம் தேவை. வி

Related articles

Recent articles

spot_img