முதல் முறையாக செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரயில்கள் மிகவும் குறைவு. பல லட்சம் பேர் ரயில்களில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் போதிய ரயில் வசதிகள் இல்லை. இதனால் முக்கியமான நாட்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில்., விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினங்கள், விடுமுறை தினங்கள் மொத்தமாக வருவதால் மைசூருல் இருந்து பெங்களூர் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூர் வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதன்படி செப்டம்பர் 4ம் தேதியான புதன்கிழமை மற்றும் செப்டம்பர் 8ம் தேதியான சனிக்கிழமை ஆகிய நாட்களில் மைசூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு இரவு ஒரு மணிக்கு வருகிறது. அதன் பிறகு பாங்கருபேட் குப்பம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து சேலம், கரூர் திருச்சி வழியாக கரைக்குடி சென்று அதன்பிறகு மானாமதுரை, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி வழியாக வழியாக செங்கோட்டைக்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிறு அன்று மாலை 4.50க்கு செல்கிறது.

இதேபோல் மறுமார்க்கமாக செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு செல்லும் ரயில தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், மானமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், குப்பம், பெங்களுர் வழியாக மைசூருக்கு வெள்ளிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் 2.20க்கு சென்றடைகிறது” இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கோட்டைக்கு பெங்களூர் மார்க்கமாக மைசூரில் இருந்து இரு மார்கங்களிலும் சிறப்பு ரயில் இயக்கம் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால் இதில் இரண்டு குறைகள் உள்ளன. முதலாவது திருச்சி புதுக்கோட்டை வழியாகச் செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகமாக உள்ளது. இரண்டாவது இரு மார்க்கங்களிலும் பெங்களூரைக் கடப்பது நேரம் கெட்ட நேரத்தில். எனவே இது பயணிகளுக்கு சிரமத்தைத் தருவதே என்று கூறுகின்றனர் பயணிகள் சங்கத்தினர் சிலர். எனினும் இந்த ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுவென நடந்து வருகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories