‘ரூட் தல’ ஒரு கெத்தா?! அது சினிமா உருவாக்கிய வெத்து!

hindumunnani - 2026

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்! வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெறும் வன்முறையை துரத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து இளைஞர் முன்னணி மாநில அமைப்பாளர் சிபி சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்…

இந்த ஆண்டு கல்லூரி திறந்ததில் இருந்தே தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே மோதல் பற்றிய செய்திக்ள வந்த வண்ணம் உள்ளது. அது இப்போது கல்லூரி மாணவர் சுந்தரின் உயிரையே பறித்துள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். உயிரிழந்த மாணவர் சுந்தரின் குடும்பத்தினருக்கு இந்து இளைஞர் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது..

இச்சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர் மூவர் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு இடையே பிரிவினை குறித்து இந்து இளைஞர்கள் முன்னணி கவலை கொள்கிறது.

கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட அரசியல்வாதிகளும் திரைத்தாறையினரும் காரணமாக இருக்கின்றனர். அரசியல்வாதிகளும் மாணவர்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை தக்கவைத்திடவும் , திரைத்துறையினர் தங்களின் பட வசூலுக்காகவும் ரூட் தல என்பது மாணவர்களின் கெளரவம் கெத்து என்று அப்பாவி மாணவர்களின் மனதில் பதிய வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் யார் ரூட் தல என்ற போட்டி தான் கல்லூரி மாணவர்களிடையே மோதல் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அநாகரிகமான, கொடூர மனப்பான்மை வளர்ந்து வருவது காவல்துறைக்கும், உயர்கல்வித்துறைக்கும் தெரிந்தும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது காலத்தின் கொடுமை.

கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் மாணவர்கள் அல்லாத இடதுசாரி அமைப்புகளை சார்ந்தவர்கள் இருப்பதாகவும், அவர்களின் தவறான மூளைச் சலவையால் மாணவர்கள் மத்தியில் பிரிவினையும் மோதல் போக்கும் உருவாகிறது.

கல்லூரி மாணவர்களிடையே தங்கள் சமூகம், தன்னை போன்ற மாணவர் தான் அவர்களும் என்ற பண்பாட்டை வளர்க்க வேண்டும். ஆக்கப்பூர்வமான செயலில் அவர்களை ஈடுபடுத்தி உண்மையான தலைமை பண்பை வளர்க்க வேண்டும். இதைதான் இந்து இளைஞர்கள் முன்னணி தொடர்ந்து சொல்லி வருகிறது. இனி இதை வரும் காலங்களில் சென்னை மாநகர கல்லூரி மாணவர்களிடையே இந்து இளைஞர் முன்னணி செயல்படுத்தும்.

கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் இத்தகைய கொடூர செயலுக்கு காரணமாக இருக்கலாம். காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு கல்லூரி மாணவர்களின் போக்கை கண்காணித்து வன்முறையில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

எப்படி கல்லூரியில் ராக்கிங் நடைபெறாமல் தடுத்திட கடுமையான வழிகாட்டுதலை அரசு செயல்படுத்துகிறதோ, அதுபோல் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் அமைதி குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் . அக்குழு மூலம் வெவ்வேறு கல்லூரி மாணவர்களிடையே நல்லுறவு மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து இளைஞர்கள் முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்… என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories