December 5, 2025, 4:56 PM
27.9 C
Chennai

நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு ரத்து; இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani
hindumunnani

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கு, இந்து சமய அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க விமர்சியாக நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு (2025) சொர்க்கவாசல் திறப்பு விழா இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்வுகளே துவங்கப்படவில்லை என்பது தற்போது தான் பக்தர்களுக்கு தெரிய வருகிறது. சொர்க்கவாசல் அருகே பழைய அலுவலக கட்டிடம் இருந்த இடத்தில் மின் கசிவு இருப்பதை காரணம் காட்டி திருவிழாவையே நிறுத்தி வைத்துள்ளது திருக்கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைய துறையின் நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது. மின் கசிவு என்பது சில மணி நேரங்களில் சரி செய்யக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை இதற்காக பத்து நாள் திருவிழாவையே நிறுத்தி வைத்து வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நிறுத்தி வைத்துள்ளது அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்து ஆலயங்கள் சிக்கி சீரழிந்து பாரம்பரியம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாகும். சனாதன ஒழிப்பு என்ற திமுகவின் செயல் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையை கையில் வைத்துக்கொண்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என பொதுமக்கள் கருதுகின்றனர்

பாரம்பரியமான சொர்க்கவாசல் திருவிழாவை உடனடியாக நடத்த வேண்டும் , வைகுண்ட ஏகாதசி திருவிழாவை நடத்தாமல் நிறுத்திய திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் திருக்கோவிலின் தக்கார் உதவி ஆணையாளர் ஆகியோர் மீது இந்து சமய அறநிலையத் துறையும் தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories