நாளை ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் இவர்கள் பங்கேற்கவில்லையாம்!

madurai auto - 2026
#image_title

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…

நாளை 9.7.25 அன்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டது. ஒருதலைப்பட்சமானது. இதனை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வேலை நிறுத்தத்தில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம்போல நமது சேவை தொடரும்.

இடதுசாரிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக விலைபோனது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தின் நிர்வாக சீர்கேடு குறித்து இவர்கள் பேசியதில்லை. போக்குவரத்து, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை என பல துறைகளும் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால், மலிவான அரசியலால் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. எந்த பெரிய தொழில் நிறுவனமும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் படித்த மாணவர்களுக்கு எந்த எதிர்காலம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உள்ளது. உள்கட்டமைப்பு மிகவும் பலகீனமாக உள்ளது.

மேலும் வருகின்ற தேர்தலை கணக்கில் கொண்டு, வெற்று அரசியல் காரணங்களுக்காக இந்த வேலை நிறுத்தத்தை நடத்தி தேசியத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் எதிராக மக்களை திசைத்திருப்ப தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தொழில், சேவை வரியான ஜி.எஸ்.டி. என்பது தனித்து இயங்குவது, அதில் எல்லா மாநில நிதி அமைச்சர்கள் நிதி செயலாளர்கள் இடம்பெறுகிறார்கள். இவர்கள் கொண்டு வரும் கருத்துகள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்த கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பரிந்துரைக்கலாமே? அது குறித்து இந்த கம்யூனிஸ்ட்கள் ஏன் பேசுவதில்லை.

கம்யூனிஸ்ட்கள் தந்திரமானவர்கள், அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதற்கான காரணங்களில் ஒன்றில் கூட தமிழக மாநில அரசின் செயல்பாடு குறித்து எந்த விமர்சனங்களும் இல்லை.

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என எல்லோரும் போராடுகிறார்கள். தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோ கட்டணம் சீரமைத்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆட்டோ தொழிலாளர்களுக்கு மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு வாரியம் செய்ய வேண்டிய நல திட்டங்கள் குறித்து இதில் வலியுறுத்தவில்லை. மாறிவரும் சூழலால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டவில்லை.

எனவே, இடதுசாரிகள் சந்தர்ப்பவாதிகள். வருகின்ற தேர்தலில் மக்களை திசைத்திருப்பி அரசியல் லாபம் பெற தொழிலாளர்களை பலிகடா ஆக்குவதை தொழிலாளர்கள் உணர வேண்டும். இந்த தேவையற்ற வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

நாளை இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மக்களுக்கான சேவை தொடரும். அதற்கு தக்க பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள், காவல்துறையினர் உறுதிபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி இந்து ஆட்டோ முன்னணி சங்கம் செயல்படும், அதற்கு மக்களின் நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories