December 5, 2025, 12:31 PM
26.9 C
Chennai

உசிலம்பட்டி: தேவர் ஜயந்தி விழா!

usilampatti devar gurupooja - 2025

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மேல் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டன மற்றும் மின் விளக்கு படங்களுடன் ஜொலித்தன- இதனை, இளைஞர்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பலர் சமூகத் தளங்களில் பதிவிட்டனர்.

தேவர் ஜயந்தியை முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகள் அமைந்துள்ளது.

இந்நிலையில் , இச்சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதி வணிகர்கள் சங்கத்தினர், கடை வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் மாலை அணிவித்தும் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மேல் வண்ண விளக்குகளால் அலங்கரித்து அமைக்கப்பட்டும் வண்ண விளக்குகளால் புகைப்படங்களுடன் ஜொலிக்கின்றன. இதனை,
உசிலம்பட்டி சுற்றியுள்ள இளைஞர்கள் கண்டுரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். மேலும், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் மரியாதை

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேமுதிக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு தேமுதிக சார்பில், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட விவசாய அணி செயலாளர் கருமாத்தூர் பாண்டி, நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்லாணி செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசகராஜா, தொட்டப்பநாயக்கணூர் கிளைச் செயலாளர் போத்திராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேடம் அணிந்த மாணவர்கள்:

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு யுகேஜி பள்ளி மாணவி தேவர் வேடமிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

usilampatti devar statue1 - 2025

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஷ்மிகா என்ற யுகேஜி மாணவி தேவர் வேடம் அணிந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories