பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Jayakumar Minister - 2026

சென்னை:
பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொள்கை முடிவுகளை ஒரு தனிநபர், தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக., என்பது கட்டுக் கோப்பான கட்சி. முன்னர் ஜெயலலிதா அப்படித்தான் கட்சியை வைத்திருந்தார். இப்போதும் கட்சி கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது. கே.சி.பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து, டிடிவி தினகரன் குறித்து கூறிய அவர், பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது. நெல்லிக்காய் சிதறுவது போல் தினகரன் அணி சிதறிவிடும். அதைத்தான் நாஞ்சில் சம்பத் விலகல் உணர்த்துகிறது. கட் அவுட்டை ஜெயலலிதாவுக்கு நிகராக அவர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தகுதி அற்றவர். இதை யாரும் மன்னிக்க முடியாது. அவருக்கு தகுதி கொஞ்சமாவது இருக்கிறதா என்பதை அவர் உணர வேண்டும். தனக்குத் தானே அழகு பார்த்தவர்;
விளம்பரத்தால் ஒருவர் உயர முடியாது என்று கூறினார் ஜெயக்குமார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories