பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Published:

Jayakumar Minister - 2026

சென்னை:
பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொள்கை முடிவுகளை ஒரு தனிநபர், தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக., என்பது கட்டுக் கோப்பான கட்சி. முன்னர் ஜெயலலிதா அப்படித்தான் கட்சியை வைத்திருந்தார். இப்போதும் கட்சி கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது. கே.சி.பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து, டிடிவி தினகரன் குறித்து கூறிய அவர், பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது. நெல்லிக்காய் சிதறுவது போல் தினகரன் அணி சிதறிவிடும். அதைத்தான் நாஞ்சில் சம்பத் விலகல் உணர்த்துகிறது. கட் அவுட்டை ஜெயலலிதாவுக்கு நிகராக அவர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தகுதி அற்றவர். இதை யாரும் மன்னிக்க முடியாது. அவருக்கு தகுதி கொஞ்சமாவது இருக்கிறதா என்பதை அவர் உணர வேண்டும். தனக்குத் தானே அழகு பார்த்தவர்;
விளம்பரத்தால் ஒருவர் உயர முடியாது என்று கூறினார் ஜெயக்குமார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img