பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Jayakumar Minister - 2026

சென்னை:
பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை சாந்தோமில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொள்கை முடிவுகளை ஒரு தனிநபர், தன்னிச்சையாக அறிவிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கொள்கை அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விவகாரங்கள் குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கொள்கை முடிவுகளை தனிநபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில் கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக., என்பது கட்டுக் கோப்பான கட்சி. முன்னர் ஜெயலலிதா அப்படித்தான் கட்சியை வைத்திருந்தார். இப்போதும் கட்சி கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது. கே.சி.பழனிசாமி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து, டிடிவி தினகரன் குறித்து கூறிய அவர், பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது. நெல்லிக்காய் சிதறுவது போல் தினகரன் அணி சிதறிவிடும். அதைத்தான் நாஞ்சில் சம்பத் விலகல் உணர்த்துகிறது. கட் அவுட்டை ஜெயலலிதாவுக்கு நிகராக அவர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தகுதி அற்றவர். இதை யாரும் மன்னிக்க முடியாது. அவருக்கு தகுதி கொஞ்சமாவது இருக்கிறதா என்பதை அவர் உணர வேண்டும். தனக்குத் தானே அழகு பார்த்தவர்;
விளம்பரத்தால் ஒருவர் உயர முடியாது என்று கூறினார் ஜெயக்குமார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories