திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் வீண் அரசியல்: ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி காட்டம்

arun-jaitley புதுதில்லி திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்து ராஜிநாமா செய்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள்… கடந்த 2004ஆம் ஆண்டு, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு முதன்முதலில் பதவியேற்றபோது, திரைப்பட நடிகர் அனுபம் கெர் தலைமையில் இருந்த தணிக்கைக் குழுவை, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட குழு என்ற ஒரே காரணத்துக்காக கலைத்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவை, அந்த அரசு அரசியலாக்கியது. ஆனால், அதுபோல் நாங்கள் செய்யவில்லை. இந்த விவகாரத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் வீண் அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது. திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் நாங்கள் (அவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ரத்தோர்) ஒருபோதும் தலையிட்டது கிடையாது. தற்போதிருக்கும் திரைப்படத் தணிக்கைக் குழுவானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டதாகும். எனவே, ஊழல் எதுவும் நடைபெற்றிருந்தாலும் கூட, அவர்களே அதற்குக் காரணமாவர். அந்த ஊழல் குறித்து, எனது கவனத்துக்கு திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் கொண்டு வரவில்லை. திரைப்படத் தணிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும், அவர்கள் மீது அவர்களே தெரிவிக்கும் குற்றச்சாட்டுதான். அந்த அமைப்பின் கூட்டத்தை மத்திய அமைச்சரோ அல்லது அமைச்சகச் செயலரோ கூட்டுவது கிடையாது. திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர்தான் கூட்ட வேண்டும். திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறாகும். அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை, திரைப்படத் தணிக்கைக் குழு பயன்படுத்தவில்லை. இதனால், அந்த நிதியானது மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.திரைப்படத் தணிக்கைக் குழுவால் ஒருபடம் நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் உரிமை திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர் பதவியில் கூட காங்கிரஸ் அரசியல் செய்கிறது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக முன்னாள் நீதிபதியை நியமித்து, அந்தப் பதவி மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தினோம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories