திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் வீண் அரசியல்: ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி காட்டம்

arun-jaitley புதுதில்லி திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்து ராஜிநாமா செய்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள்… கடந்த 2004ஆம் ஆண்டு, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசு முதன்முதலில் பதவியேற்றபோது, திரைப்பட நடிகர் அனுபம் கெர் தலைமையில் இருந்த தணிக்கைக் குழுவை, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட குழு என்ற ஒரே காரணத்துக்காக கலைத்தது. திரைப்படத் தணிக்கைக் குழுவை, அந்த அரசு அரசியலாக்கியது. ஆனால், அதுபோல் நாங்கள் செய்யவில்லை. இந்த விவகாரத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர்கள் வீண் அரசியலாக்குவது வருத்தத்துக்குரியது. திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் நாங்கள் (அவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ரத்தோர்) ஒருபோதும் தலையிட்டது கிடையாது. தற்போதிருக்கும் திரைப்படத் தணிக்கைக் குழுவானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டதாகும். எனவே, ஊழல் எதுவும் நடைபெற்றிருந்தாலும் கூட, அவர்களே அதற்குக் காரணமாவர். அந்த ஊழல் குறித்து, எனது கவனத்துக்கு திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் கொண்டு வரவில்லை. திரைப்படத் தணிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும், அவர்கள் மீது அவர்களே தெரிவிக்கும் குற்றச்சாட்டுதான். அந்த அமைப்பின் கூட்டத்தை மத்திய அமைச்சரோ அல்லது அமைச்சகச் செயலரோ கூட்டுவது கிடையாது. திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர்தான் கூட்ட வேண்டும். திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறாகும். அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை, திரைப்படத் தணிக்கைக் குழு பயன்படுத்தவில்லை. இதனால், அந்த நிதியானது மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.திரைப்படத் தணிக்கைக் குழுவால் ஒருபடம் நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்குச் செல்லும் உரிமை திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால், மேல்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர் பதவியில் கூட காங்கிரஸ் அரசியல் செய்கிறது. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக முன்னாள் நீதிபதியை நியமித்து, அந்தப் பதவி மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தினோம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories