ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி: அமைச்சர் சுரேஷ் பிரபு

Published:

Suresh-Prabhu புதுதில்லி “ரயில்வே துறையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். நாடு முழுவதும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக, 30,000 கி.மீ. முதல் 40,000 கி.மீ. தொலைவு வரையிலான ரயில் பாதைகள் விரிவுபடுத்தவேண்டும். உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அரசின் ஓய்வூதிய நிதியைக் கொண்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இந்த நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். ரயில்வே துறையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை, ரயில்வே துறை பங்களிப்பு செய்ய முடியும். ரயில்வே துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் இல்லை என கூறப்படுவது சரியல்ல என்று அவர் பேசினார்/ புது தில்லியில், ஆங்கில நாளிதழின் சார்பில் உலக வர்த்தக மாநாடு சனிக்கிழமை நேற்று நடைபெற்றது. அதில் பேசியபோது, சுரேஷ் பிரபு இவ்வாறு கூறினார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img