புதுதில்லி வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை தெரிவித்தார். “கிரண் பேடி, பாஜகவில் இணைந்துள்ளதை தில்லி மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களின் மக்களும் வரவேற்றுள்ளனர். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கிரண் பேடியை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அங்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நிலையான ஆட்சியை அமைக்கும். ட்டு மக்கள் பாஜக ஆட்சிக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதனடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குள், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும்.” என்றார் பிரகாஷ் ஜாவ்டேகர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள பாஜ கட்சி அலுவலகத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இவ்வாறு தெரிவித்தார்.
2019க்குள் 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கும்: பிரகாஷ் ஜாவ்டேகர் நம்பிக்கை
Popular Categories


