1984ம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்று பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு குழு அமைப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பாதல் கூறியுள்ளார்.

